கொரோனாத்தொற்றுக்களும், அதனாலான இறப்புக்களும் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்தபோது மார்ச் மாதமளவில் கொண்டுவரப்பட்ட கடுமையான பொது முடக்கத்தை மீண்டும் கொண்டுவருகிறது பிரிட்டன்.
ஏற்கனவே ஸ்கொட்லாந்து, வேல்ஸ், வட அயர்லாந்து பகுதிகளில் பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டது இதே மாதிரியான கடுமையான கட்டுப்பாடுகள். பாடசாலைகள் மூடப்படுகின்றன. இந்த நிலை முதல் கட்டமாக ஜனவரி மாதம் முழுவதும் தொடரும்.
