இந்தியாவின் 20 விகிதமான நிலப்பரப்பின் நிலக்கீழ் நீர் பாவிப்பவர்களுக்கு ஆபத்தையூட்டும் நஞ்சு நிறைந்ததாகக் காணப்படுகிறது.

பெங்காலிலிருக்கும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் நடத்திய செயற்கையறிவுத் திறனாலான ஆராய்ச்சிகளின்படி இந்தியாவின் 20 விகிதமான நிலப்பிராந்தியத்தில் நிலக்கீழ் நீர் மிகவும் நச்சுத்தனமாக இருக்கிறது. அது சுமார் 250 மில்லியன் மக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும் என்கிறது…

ஏழு ரிபப்ளிகன் கட்சியினர் மட்டும் டிரம்ப்பைத் தண்டிக்கவேண்டுமென்று வாக்களித்தது போதாமையால் விடுவிக்கப்பட்டார் மீண்டும் டிரம்ப்.

செனட் சபையில் டிரம்ப்பைக் குற்றவாளியாகக் காண்பதற்கு 100 பேருள்ள சபையின் மூன்றிலிரண்டு பகுதியினர் அதற்கு ஆதரவாக வாக்களிக்கவேண்டும். ஆனால் 57-43 என்ற வாக்குகளே ஆதரவாக விழுந்தன. சபையின் 50 டெமொகிரடிக் கட்சியினருடன் ஏழு…

நெப்போலியன் 1812 இல் ரஷ்யாவுடன் போரிட்டுத் தோல்வியுற்றுப் பின்வாங்கிய சமயத்தில் இறந்த இராணுவத்தினரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.

பெரும் இராணுவ வெற்றிகளை அடைந்த நெப்போலியனுடைய இராணுவமும் ரஷ்யாவைக் கைப்பற்ற முற்பட்டுத் தோல்வியடைந்தது. வியாசாமா போர்க்களம் என்ற அந்தப் போரில் ரஷ்யா பின்வாங்க ஆரம்பித்தபோது இறந்த 120 போர்வீரர்களும் 200 வருடங்களுக்குப் பின்னர்…

தமது நாடுகளுக்குக் கொவிட் 19 தடுப்பு மருந்துகள் தேவையில்லையென்று தன்சானியாவுக்கு அடுத்ததாக புருண்டியும் அறிவித்திருக்கிறது.

கடந்த மாதத்தில் புருண்டி நாட்டின் நீர், நில எல்லைகளெல்லாம் கடந்த மாதம் மூடப்பட்டன. சுமார் 1,600 பேர் கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  “நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களில் 95 % பேர் குணமாகி வருகிறார்கள்….

ஏற்கனவே கொவிட் 19 ஆல் தொற்றப்பட்டவர்களுக்கு ஒரு ஊசி மட்டுமே போதுமென்கிறது பிரான்ஸ்.

ஐரோப்பிய ஒன்றியத்தினுள் பாவிக்கப்படும் தடுப்பு மருந்துகளின் இரண்டு தடுப்பூசிகள் பெற்றவர்கள் பலமான கொரோனா  எதிர்ப்புச் சக்தியைப் பெற்றிருப்பதாக ஆராய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால், ஏற்கனவே நோயிலிருந்து குணமானவர்களுக்கு ஒற்றைத் தடுப்பூசி மட்டுமே போதுமென்ற அறிவுறுத்தலைப்…

நீரிழிவு நோய்க்குப் பாவிக்கப்படும் மருந்தொன்று உடல் பருமனைக் குறைக்க உதவுமென்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

“உடல்பருமனைக் குறைப்பதற்கான போராட்டத்தில் இது மிகப்பெரிய ஒரு வெற்றி,” என்று New England Journal of Medicine சஞ்சிகையில் தமது ஆராய்ச்சியின் விபரங்களை வெளியிட்டிருக்கிறார்கள் நோர்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள்.  உடலில் இன்ஸுலினை…

கடற்கொள்ளையர்களிடம் அகப்பட்டிருந்த துருக்கிய மாலுமிகள் விரைவில் நாடு திரும்புவார்கள்.

கடந்த மாதம் நைஜீரியாவுக்கு வெளியே கினியா குடாவில் வைத்துக் கடற்கொள்ளைக்காரர்களால் கைப்பற்றப்பட்ட துருக்கிய மாலுமிகள் விடுவிக்கப்பட்டார்கள் என்று துருக்கி தெரிவிக்கிறது. கடற்கொள்ளையர்கள் தாக்கியபோது கொல்லப்பட்ட ஒரு ஆஸார்பைஜானியைத் தவிர 15 துருக்கிய மாலுமியர்களும்…

ரிஹானாவின் தயாரிப்புக்கள் ஜார்காண்டில் குழந்தைகளின் வாழ்வைப் பாழடிப்பதாகக் குறிப்பிட்டு போராட்டம்.

பிரபல இசைத் தாரகை ரிஹானாவுக்கெதிராக இந்தியாவின் ஜார்காண்டின் குழுவொன்றினால் ஒரு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. Fenty Beauty என்ற ரிஹானாவின் அழகுசாதனப் பொருட்கள் சிறுவயதினரைச் சுரங்க வேலைக்குப் பாவிக்கும் நிறுவனத்தின் பொருட்களைப் பாவிப்பதாகக் குறிப்பிட்டு…

பாலுறவுக்கான சம்மதத்தைக் கொடுக்கும் வயதாக 15 ஐ தீர்மானிக்கவிருக்கிறது பிரான்ஸ்.

ஒருவர் எத்தனை வயதில் உடலுறவுக்கான சம்மதத்தை இன்னொருவருக்குக் கொடுக்கலாம் என்ற வயது வரம்பு இல்லாத நாடாக பிரான்ஸ் இருந்துவந்தது. அதனால் பாலியல் குற்றங்களுக்காகத் தண்டனை வழங்குவது நீண்டகாலமாகவே பிரச்சினையாக இருந்து வந்துள்ளது. சிறு…

இன்றிரவே டொனால்ட் டிரம்ப் மீதான “கிளர்ச்சி செய்யத் தூண்டினார்” என்ற வழக்கு முடிவடையலாம்.

ஜனவரி 06 ம் திகதி அமெரிக்காவின் பாராளுமன்றக் கட்டடத்துக்குள் புகுந்து வன்முறையிலிறங்கிய டிரம்ப்பின் ஆதரவாளர்கள், அங்கே வரமுதல் பங்குபற்றிய டிரம்ப்பின் கூட்டத்தில் அவரது வாக்குகளால் உசுப்பேற்றப்பட்டார்களா (incitement to rebellion) என்று இன்று…