வெற்றிநடை புதினப்பக்கம் ஒருநோக்கு 12.02.2021

வெற்றிநடை புதினப்பக்கம் கடந்த வார செய்திகளின் நோக்காக இந்த வார வெள்ளிக்கிழமை 12.02.2021 ஆகிய இன்றும் வெற்றிநடை நேரலையில் இடம்பெற்றது. அதன் ஒளிப்பதிவை இங்கே காணலாம்

அமெரிக்க அரசியலில் ரிபப்ளிகன் கட்சியிலிருந்து பிளவடைந்தவர்கள் மூன்றாவது சக்தியாக உருவெடுப்பார்களா?

பதவியிலிருந்து விலகிய டொனால்ட் டிரம்ப்பின் நிழல் தொடர்ந்து ரிபப்ளிகன் கட்சியின் மேல் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. அதன் விளைவாக சுமார் 120 ரிபப்ளிகன் கட்சி முக்கியஸ்தவர்கள் கூடி நடாத்திய மாநாட்டில் புதியதொரு கட்சி தொடங்குவது பற்றி…

வட அயர்லாந்துக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான வர்த்தகப் பிரச்சினைகள் பற்றி பிரிட்டன் – ஐரோப்பிய ஒன்றியப் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதியாக இருக்கும் வட அயர்லாந்துக்கு பிரிட்டனிலிருந்து வரும் பொருட்கள் பற்றிய சுங்கப் பிரச்சினைகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் தடிக்கின்றன. எனவே, அயர்லாந்து மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பிரிட்டனுடனான…

வட அயர்லாந்துக்கும் ஐரோப்பாவுக்குமிடையிலான வர்த்தகப் பிரச்சினைகள் பற்றி பிரிட்டன் – ஐரோப்பிய ஒன்றியப் பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தின்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் பகுதியாக இருக்கும் வட அயர்லாந்துக்கு பிரிட்டனிலிருந்து வரும் பொருட்கள் பற்றிய சுங்கப் பிரச்சினைகள் பற்றிய பேச்சுவார்த்தைகள் தடிக்கின்றன. எனவே, அயர்லாந்து மற்றைய ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை பிரிட்டனுடனான…

உலக நாடுகளிடையே தொற்றிப் புதியதாகப் பீதியைக் கிளப்பிவரும் பிரிட்டனில் திரிபடைந்த கொரோனாக் கிருமி வகை.

முதல் முதலாகப் பிரிட்டனில் காணப்பட்ட திரிபடைந்த கொரோனாக் கிருமிகள் இப்போது எண்பது நாடுகளில் வேகமாகப் பரவி வருகின்றன. பிரிட்டன் முழுவது அது எப்படிக் காட்டுத்தீ போலப் பரவியதோ அதே போலவே உலகெங்கும் பரவும்…

ஷின்சியாங் சீர்திருத்த முகாம்கள் பற்றியப் பொய்ச் செய்திகளைப் பரப்பியதாக பி.பி.சி – சீனாவில் தடை செய்யப்பட்டது.

சீனாவின் சிறுபான்மை இனத்தவர்களில் ஒருவரான ஊகூரர்களை கம்யூனிஸக் கோட்பாடுகளில் ஊறவைப்பதற்காகக் கட்டாய முகாம்களில் சிறைவைப்பது பற்றி பிபிசி உட்படப் பல ஊடகங்களும் எழுதி வருகின்றன. அம்முகாம்களில் அடிமை வேலை, முஸ்லீம் பெண்கள் மீதான…

“இந்தியச் சட்டங்களுக்கு ஏற்ப நடந்தால் மட்டுமே சமூகவலைத்தளங்கள் இந்தியாவில் இயங்க அனுமதிக்கப்படும்”, என்று எச்சரிக்கும் அமைச்சர்!

இந்திய அரசின் ஆணையை ஏற்றுக்கொண்டு சுமார் 1,100 கணக்குகளை மூடிவிட மறுத்த டுவிட்டரைக் கண்டித்திருக்கிறார் இந்திய தொலைதூரத் தொழில்நுட்ப அமைப்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத். குறிப்பிட்ட அந்தக் கணக்குகளின் மூலம் நடந்துவரும் விவசாயிகள்…

மரண தண்டனைகளை நிறைவேற்றுவதை அமெரிக்கா முழுவதுமாக நிறுத்தவேண்டுமென்ற அறுதி முடிவை எடுக்கும்படி ஜோ பைடனிடம் வேண்டுகோள்.

எண்பதுக்கும் மேற்பட்ட மனித உரிமைக்குழுக்கள் ஜோ பைடன் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகக் குறிப்பிட்ட மரண தண்டனைகள் வழங்குதலையும், நிறைவேற்றலையும் நிறுத்தவேண்டுமென்று கடிதங்கள் எழுதிக் கோரியிருக்கின்றன. அமெரிக்க சரித்திரத்திலேயே என்றுமில்லாத அளவுக்கு…

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி இறங்கியதாகக் கதை விட்ட மூன்று இந்தியர்களை ஆறு வருடங்களுக்குத் தடை செய்திருக்கிறது நேபாளம்.

சீமா ராணி கோஸ்வாமி, நரேந்திர சிங் யாதவ் ஆகிய இருவரும் 2016 இல் எவரெஸ்ட் சிகரத்தை முழுவதுமாக ஏறி இறங்கியதாகப் பொய்ச் சான்றிதழ் கொடுத்த அவர்களது குழுத் தலைவரையும் அவர்களிருவரையும் நேபாளம் ஆறு…

அல் – ஹத்தூல் குடும்பத்தினர் லுஜைனின் விடுதலைக்குக் காரணம் ஜோ பைடனே என்று நன்றி தெரிவிக்கிறார்கள்.

எவரும் எதிர்பாராதவிதமாக சவூதி அரசால் சமீபத்தில் நீண்டகாலச் சிறைத்தண்டனை விதித்துத் தண்டிக்கப்பட்ட லூஜைன் அல் – ஹத்தூல் நேற்று விடுவிக்கப்பட்டார் என்ற செய்து உலகமெங்கும் பரவியது. சவூதி அரேபியாவின் பெண்களை அங்குள்ள ஆண்கள்…