எமக்கான பூர்வீக நிலங்களில் வாழவிடாது இதுவரைகாலமும் எமது வாழ்வாதார அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு நல்லாட்சி அரசு என்று தங்களை சொல்லித்திரியும் அரசினரும் தடுத்து வருவதாக வன்னி மக்கள் நேரடியான குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான இராணுவ அடக்குமுறைகளுக்கு இந்த அரசும் தடையாகவே உள்ளது என்று பகிரங்கமாக கொழும்பில் மக்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்தும் இந்த அரசை நம்பி பயனில்லை என்று தெரிவிக்கும் மக்கள் சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டுவதற்காகவே இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னேடுபதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
