தாய்லாந்தின் எல்லைக்கருகே ஒரு இராணுவ முகாமைக் கைப்பற்றியதாக மியான்மாரின் விடுதலை இயக்கமொன்று தெரிவிக்கிறது.

நீண்ட காலமாக மியான்மாரின் இராணுவத்துக்கெதிராக ஆயுதங்களுடன் போராடிவரும் வெவ்வேறு சிறுபான்மை இனத்தின் போராட்டக் குழுக்களுக்கும் சமீபத்தில் ஆதரவு அதிகரித்துள்ளது. அதன் காரணம் நாட்டின் இராணுவம் செய்த ஆட்சிக்கவிழ்ப்பால் மக்கள் நாடெங்கும் கொந்தளித்துக்கொண்டிருப்பதேயாகும்.  தாய்லாந்து…

தாய்லாந்தின் எல்லைக்கருகே ஒரு இராணுவ முகாமைக் கைப்பற்றியதாக மியான்மாரின் விடுதலை இயக்கமொன்று தெரிவிக்கிறது.

நீண்ட காலமாக மியான்மாரின் இராணுவத்துக்கெதிராக ஆயுதங்களுடன் போராடிவரும் வெவ்வேறு சிறுபான்மை இனத்தின் போராட்டக் குழுக்களுக்கும் சமீபத்தில் ஆதரவு அதிகரித்துள்ளது. அதன் காரணம் நாட்டின் இராணுவம் செய்த ஆட்சிக்கவிழ்ப்பால் மக்கள் நாடெங்கும் கொந்தளித்துக்கொண்டிருப்பதேயாகும்.  தாய்லாந்து…

தனது ஜனாதிபதிக் காலத்தை நீடிப்பதை எதிர்ப்பவர்கள் அதிகரிப்பதால் தேர்தல் நடத்தத் திட்டமிடுகிறார் சோமாலிய ஜனாதிபதி.

திட்டமிட்டபடி நாட்டின் தேர்தலை நடத்தாமல் இழுத்தடித்ததால் சோமாலியாவின் அரசியல் நிலைமை மேலும் மோசமாகிறது. ஞாயிறன்று ஜனாதிபதி முஹம்மது அப்துல்லாஹி முஹம்மதுவை எதிர்ப்பவர்கள் நாட்டின் இராணுவத்துடன் மோதலை ஆரம்பித்தார்கள். ஜனாதிபதியின் படைகள் தலைநகர் மொகடிஷுவின்…

நாடு சிதைவதைத் தடுக்காவிடில் பிரான்ஸில் சிவில் யுத்தம் மூளும்! 20 முன்னாள் ஜெனரல்கள் கடிதம்.

அதிபர் மக்ரோனின் ஆட்சி பிரான்ஸை “இஸ்லாமியர்களது கைகளில்” சிக்கிச் சிதைய விட்டால் அதைத் தடுப்பதற்காக நாட்டில் ராணுவ ஆட்சி அமுல்செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவ ஜெனரல்கள் இருபது பேர் கூட்டாகக் கோரிக்கை…

ஒத்தமான் சாம்ராஜ்யத்தில் கொல்லப்பட்ட ஆர்மீனியர்களை இனக்கொலை என்று ஜோ பைடன் அங்கீகரித்ததை வாபஸ் வாங்கச் சொல்லும் எர்டகான்.

இன்றைய துருக்கியை மையமாகக் கொண்டிருந்த ஒத்தமான் சாம்ராஜ்யத்தில் 1915 – 1917 ம் ஆண்டுகளுக்கிடையே கொல்லப்பட்ட சுமார் 1.5 மில்லியன் ஆர்மீனியர்களை “இன அழிப்பு” என்று அமெரிக்கா சனியன்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. தொடர்ந்தும்…

இந்தியாவின் கொவிட் 19 பரீட்சைகள் நம்பத்தகுந்தவையல்ல என்று குற்றஞ்சாட்டுகிறார் மேற்கு ஆஸ்ரேலிய முதலமைச்சர்.

மேற்கு ஆஸ்ரேலியாவின் முதலமைச்சர் மார்க் மக்கோவன் “இந்தியாவில் நடத்தப்படும் கொவிட் 19 பரீட்சைகள் தெளிவில்லாதவை அல்லது தவறானவை,” என்று குறிப்பிடுகிறார். இந்தியாவிலிருந்து பேர்த் நகருக்குத் திரும்பிய நாலு பேரிடம் கொரோனாத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்தே…

தடுப்பு மருந்து தயாரிக்கும் இந்திய நிறுவனத்துக்கான தளபாடங்களை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்கா அறிவிப்பு.

“எங்கள் நாட்டு மருத்துவசாலைகள் கடந்த வருடம் கொவிட் 19 நோயாளிகளால் செயற்பாடுகளுக்குத் திணறிக்கொண்டிருந்தபோது இந்தியா எங்களுக்கு உதவியதை மறக்கவில்லை. அவர்களுக்கு நாம் உதவுவோம்,” என்று டுவீட்டியிருந்த அமெரிக்க ஜனாதிபதி அமெரிக்க ஏற்றுமதி விதிகளைத்…

1988 க்குப் பின்னர் முதல் தடவையாக உலகின் இராணுவச் செலவுகள் மிகப்பெருமளவில் அதிகரித்திருக்கின்றன.

உலகின் ஒட்டுமொத்தப்  பொருளாதாரத் தயாரிப்பில் 2.4 % இராணுவச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. 2020 ம் ஆண்டு கொரோனாத் தொற்றுக்கள் உலகைக் கவ்விப்பிடித்திருந்த சமயத்தில் 1988 ம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாக மிகப்பெருமளவில்…

ரஷ்ய ராஜதந்திரியை நாட்டைவிட்டு வெளியேற்றுபவர்களின் வரிசையில் அடுத்ததாக ருமேனியா.

கடந்த இரண்டு வாரங்களுக்குள் பல நாடுகளும் ரஷ்யாவின் ராஜதந்திரிகளைத் தமது நாட்டில் சந்தேகத்துக்குரிய உளவுக்குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறி வெளியேற்றி வருகிறார்கள். அவர்களில் அடுத்ததாக இடம்பெற்றிருக்கிறது ருமேனியா. அலெக்ஸி கிரிச்சியேவ் என்ற ரஷ்யத் தூதரக…

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனாக்கால உதவித்திட்டத்திலிருந்து மிகப்பெரும் தொகையைப் பெறப்போகும் நாடு இத்தாலி.

கொரோனாத்தொற்றுக்களால் நாட்டில் ஏற்பட்ட தாக்கங்களை எதிர்கொண்டு மீண்டும் அவைகளுக்கு ஊட்டச்சத்துக் கொடுப்பதற்காக 222 பில்லியன் எவ்ரோக்கள் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்களை இத்தாலி முன்வைத்திருக்கிறது. அத்தொகையில் 192 பில்லியன் எவ்ரோக்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் கொரோனாக்கால…