பாரிஸில் சென் நதியோரம் கூடிகுடித்துக் களிக்க தடை.

பாரிஸில் நீல வானமும் மிதமான சூரிய ஒளியும் வீடுகளைவிட்டு வெளியே வந்து பொது இடங்களில் ஒன்றுகூடிக் களிப்பதற்கு நகரவாசிகளைத் தூண்டுகின்றன. பாரிஸ் நகரை ஊடறுக்கும் சென்(Seine) நதியின் கரையோர இருக்கைகளில் திரண்ட பெரும்…

நைல் நதியை மறித்து எத்தியோப்பியா கட்டிவரும் அணையால் பக்கத்து நாடுகளுடன் ஏற்பட்ட சர்ச்சை தொடர்கிறது.

நைல் நதியின் 85 விகிதமான நீரைக் கொண்ட நீல நைல் நதியை மறித்து எத்தியோப்பியா 2011 முதல் கட்ட ஆரம்பித்திருக்கும் Grand Ethiopian Renaissance Dam ஆல் நைல் நதி நீரில் தங்கியிருக்கும்…

கிரீஸின் சிறைச்சாலைக்குள் உண்ணாவிரதமிருக்கும் இடதுசாரித் தீவிரவாதி.

சிறைச்சாலைக்குள் தான் நடத்தப்படும் விதத்தில் திருப்தியில்லை என்று குறிப்பிட்டு இரண்டு மாதமாக உண்ணாவிரதமிருக்கிறார்  டிமித்திர்ஸ் குபொர்டினாஸ். உணவை மறுத்ததுமன்றி நீரருந்தவும் மறுத்ததால் உடல் நிலை மோசமாகிப்போய் அவசர காலச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்…

இராணுவ அராஜகத்துக்கு எதிரான நிலைப்பாடு மியான்மாரில் மக்களை ஒன்றுபட வைக்கிறது.

ஒரே நாளில் 38 பேரைச் சுட்டுக் கொன்ற பிறகு டிக் டொக்கில் இராணுவத்தினர் வெவ்வேறு ஆயுதங்களை மக்களுக்குக் காட்டி “உன்னை வீதியில் கண்டால் இதனால் கொன்று விழுத்துவேன்,” என்று மிரட்டியும் கூட நாளாந்தம்…

புர்க்கா, நிக்காப் ஆகியவற்றைத் தடை செய்யலாமா என்று கேட்டு வாக்கெடுப்பு நடத்தும் சுவிஸ்.

ஒரு பக்கத்தில் கொரோனாத் தொற்றுப் பரவாதிருக்க முகக்கவசம் அணிந்து கொள்ளும் ஐரோப்பா மென்மேலும் பாதுகாப்பான முகக்கவசம் எதுவென்று வாதிட்டுக்கொண்டிருக்கிறது. அதே சமயம் பெல்ஜியம், பிரான்ஸ் வழியில் நாடு முழுவதும் புர்க்கா, நிக்காப் ஆகிய…

எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதால் செனகல் நாட்டில் சரித்திரம் கண்டிராத மக்கள் போராட்டம்.

நீண்ட காலமாகவே ஸ்திரமான அரசியல் காலநிலையுடனிருந்த மேற்கு ஆபிரிக்க நாடான செனகலில் கடந்த சில நாட்களாகப் பேரணிகளும், ஊர்வலங்களும் வெடித்திருக்கின்றன. காரணம், வன்புணர்வு செய்யப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் உஸ்மான் சொங்கோ புதனன்று…

வெற்றிநடை நேரலையில் Tamil Acadamic association(TAA) UK இன் கருத்தரங்கு

சவால் கொண்ட இந்த கொவிட் 19 இனால், மக்கள் பாதிப்புறும் இந்தக் காலங்களில், தொடர்ச்சியாக Tamil Acadamic association(TAA) UK இனால் நடாத்தப்பட்டு வரும் கருத்தரங்கு இந்த வாரமும் 06/03/2021 சனிக்கிழமை இடம்பெறுகிறது….

பிரான்ஸில் சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பூசி ஏற்றப் பின்னடிப்பா?

பிரான்ஸில் மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் தாங்களாக முன்வந்து தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இன்று அழைப்பு விடுத்திருக்கிறார். மருத்துவர்கள், தாதியர்கள், மருத்துவப் பராமரிப்பாளர்கள், மருத்துவிச்சிகள், வீடுகளில்…

செவ்வாயில் நாசாவின் விண்கலம்சில மீற்றர்கள் நகர்ந்து .

நாசா ரோவர் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கி இரண்டு வாரங்களின் பின்னர் தனது முதல் தரை நகர்வை நிறைவு செய்துள்ளது. பெப்ரவரி 18 ஆம் திகதி செவ்வாயில் “ஜெஸீரோ கிரேட்டர்” (Jezero Crater) என்கின்ற…

எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றாக வரவிருக்கும் எத்தியோப்பியத் தேர்தலிலிருந்து விலகிக்கொண்டிருக்கின்றன.

நீண்ட காலமாக நாட்டுக்குள்ளிருந்த கலவரங்களையும், பக்கத்து நாடுகளுடனிருந்த போர்களையும் நிறுத்திப் பேச்சுவார்த்தைகளால் சமாதானம் செய்துகொண்ட எத்தியோப்பியாவின் பிரதமர் அபிய் அஹமது சமாதானத்துக்கான நோபல் பரிசையும் வென்றார். அவரது முயற்சியால் ஆயுதப் போரிலீடுபட்டிருந்த குழுக்கள்…